Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செய்யாற்றைவென்றான் பகுதியில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

ஜனவரி 13, 2024 01:38

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செய்யாற்றைவென்றான் பகுதியில் உள்ள செய்யாற்றில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை திட்ட முன் வரைவு தயாரிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .

இதற்கான நிதியை ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்யாற்றைவென்றான் பகுதியில் தடுப்பணை கட்டினால் சுமார் 12000 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய நிலத்தடி நீர்மட்டம் உயரும் மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகள் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்த இயலும் என கோரிக்கை வைத்து பல்வேறு கூட்டங்களில் விவசாய சங்கத்தினர் கோரிக்கை களை முன் வைத்தனர்.

இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் விளக்கம் கேட்ட போது தடுப்பணை குறித்து விரிவான திட்ட மதிப்பீடு தயார் தற்போது செய்யப்பட்டு 26.5 லட்சம் மதிப்பில் அரசின் முன் திட்ட முன் வரைவு வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வரும் கூட்டத்தொடரில் இதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு தடுப்பணை கட்ட முன்வர வேண்டும் என தமிழக கட்சி சார்பற்ற விவசாய  சங்கத்தினர் கோரிக்கை வைத்து செய்யாற்றில்  உடனடியாக தடுப்பணையைக் கட்ட வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்யாறில் இருந்து பிரிந்து செல்லும் காழியூரான் கால்வாய், அனக்காவூரான் கால்வாய் ஆகியவை மூலம் நீர் பிரித்து அனுப்பப்பட்டு பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய ஏதுவாக அமையும் எனவும் மேலும்  ஆண்டு தோறும் பெய்யும் மழை செய்யாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்